திருவரங்கம்

திருச்சி: திருச்சி - திருவரங்கச் சாலையில் மீண்டும் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி: திருவரங்கத்தின் அரங்கநாதசாமி கோவிலில் மே மாதம் 6ஆம் தேதி சித்திரைத் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திருவரங்கக் கோவில் சித்திரைத் தேரோட்டத்தை ஒட்டி மே 6ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி: திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து ராமேசுவரம் புறப்பட்டார்.
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருவரங்கம் கோயிலுக்கு வந்துசெல்லும் ஏராளமான பக்தர்களின் வசதிக்காகவும் அங்கு வசிக்கும் உள்ளூர் மக்களின் வசதிக்காகவும் அங்கு பேருந்து நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னை: “எங்காவது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அரசியல் சாயம் பூசுவதுதான் அண்ணாமலையின் வாடிக்கை. “முதலில் சென்னையில் பெய்த பெருமழையை வைத்து அரசியல் செய்ய நினைத்தார்கள், இரண்டு நாள்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர். இதில் எந்த அரசியலும் எடுபடவில்லை. எனவே, இப்போது பழைய பல்லவியை புது மெட்டில் பாட ஆரம்பித்துள்ளனர்,” என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.